நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

முத்தொள்ளாயிரம்

மொழிபெயர்ப்பாளர்

திரு. கே. ராமநாதன்

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-974289-8-2

மொத்த பக்கங்கள்

112

விலை

Rs.200.00

நூல் பற்றி:-

முத்தொள்ளாயிரம்

தமிழ் இலக்கியத்தின் சிறந்த நூல்கள் 41 இல் ஒன்றாக முத்தொள்ளாயிரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்க்கும்போது, சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் தமிழ் மாநிலத்தின் பெரிய மன்னர்கள் என்பது தெளிவாகிறது. மூன்று மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமைப்பட மாட்டார்கள் என்றாலும் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒன்று சேர்ந்தனர். முத்தொள்ளாயிரம் இந்த மூன்று மன்னர்களின் கீர்த்தியைப் பற்றி எழுதப்பட்ட காப்பியமாகும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்நூலில் எந்தக் கவிஞரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சங்க இலக்கியத்திற்கு இணையாக மதிக்கப்பட்ட இந்த நூலின் சிறப்பியல்புகள் பல. மூன்று மன்னர்கள் ஒற்றுமைப்பட மாட்டார்கள் என்றாலும் கவிஞர் தமிழ் மொழியின் மூலம் அவர்கள் மூவரின் கீர்த்தியையும் சமம் செய்கிறார். இவ்வாறு மூன்று மன்னர்களையும் ஒரே வரிசையில் வைப்பது தனிச்சிறப்பு. கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கவிஞர் எங்கும் மூன்று மன்னர்களின் தனிப்பட்ட பெயரைக் குறிப்பிடாமல் அவர்களை அவர்கள் பட்டத்தின் பெயரால் மட்டுமே சுட்டியுள்ளார். இதுவும் இந்நூலின் ஒரு சிறப்பியல்பு. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தக் காப்பியம் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இக்கூற்றில் இன்றுவரை அறிஞர்கள் இணக்கப்பட வில்லை.