நூல் விவரங்கள்
பின் செல்
தலைப்பு |
திரிகடுகம் |
மொழிபெயர்ப்பாளர் |
முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன் |
வெளியீட்டாளர் |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. |
வெளியீட்டு ஆண்டு |
2024 |
மொழி |
இந்தி |
ப.த.நூல் எண் |
978-81-975737-4-3 |
மொத்த பக்கங்கள் |
96 |
விலை |
Rs.200.00 |
நூல் பற்றி:- |
திரிகடுகம் திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருட்களை இடித்துச் சூரணம் செய்து மாத்திரைகளாகச் செய்தால், இந்த மூன்று மூலிகைகளையும் திரிகடுகம் என்பர். அதை உட்கொண்டால் பல நோய்கள் குணமாகும். இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று நல்ல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மனிதன் ஆரோக்கியமான மனத்துடனும் ஆரோக்கியமான உடலுடனும் வாழ முடியும். இதன் அடிப்படையில் இந்நூலுக்குத் திரிகடுகம் என்று பெயரிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார். அவர் முதல் பாடலில் வணக்கமாக மகாவிஷ்ணுவை துதித்துள்ளார். எனவே அவர் வைணவர் என்றும் விஷ்ணு பக்தர் என்றும் கூறப்படுகிறார். அருந்ததிக் கற்பினார் தொழுந் திருந்திய தொல்குடியிற் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லித் திரிகடுகம் போலு மருந்து. அரியகலுங் கேள்வியார் நட்பும் மூன்றும் அருந்ததி போன்ற கற்புடைய பெண்களுடன் நட்பு கொள்ளுதல், சிறந்த தொல்குடியில் பிறந்த மாண்புடையோருடன் பழகுதல், அரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களுடன் நட்பு கொள்ளுதல் - இந்த மூன்றும் திரிகடுகம் மருந்து போல நன்மை பயக்கும். (1) |