திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை அறிமுகம்:-

இது முருகனிடத்தே ஞானம் பெற்று நன்னெறியடைய விரும்புவோரை வழிப்படுத்தற் பொருட்டு நக்கீரனால் பாடப்பெற்றது. 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் ஆனது. முருகு, புலவராற்றுப்படை என வேறு பெயர்களும் இந்நூலுக்கு உள்ளன. இது பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது.

முருகப்பெருமான் உறையும் திருத்தலங்களான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. மேலும், முருகனின் திருவுருவச் சிறப்பு, முருகனின் ஆறு திருமுகங்கள், பன்னிரு கைகளின் செயல்கள், சூரனுடன் செய்த போர்ச்சிறப்பு, சூரர மகளிர் செயல்கள், முருகன் எழுந்தருளியுள்ள நீர்த்துறைகள், வழிபடும் முறை, அருள்பெறும் முறை, அடியார் இயல்புகள், அருள்புரியும் விதம் ஆகியன இதன் பொருண்மைகளாக அமைகின்றன.

திருமுருகாற்றுப்படை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 திருமுருகாற்றுப்படை பொழிப்புரையும் அரும்பத விளக்கமும் (உரையாசிரியர்: எஸ். துரைசாமி ஐயர்; வெளியீடு: மநோன்மணி விலாஸ அச்சுக்கூடம், சென்னை) 1920 உரை
2 திருமுருகாற்றுப்படை (வெளியீடு: பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை) 1922 மூலம்
3 பத்துப்பாட்டு முதலாவது திருமுருகாற்றுப்படை (உரையாசிரியர்: நச்சினார்க்கினியர்; பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர், வெளியீடு: கேசரி அச்சுக்கூடம், சென்னை) 1931 உரை
4 திருமுருகாற்றுப்படை (உரையாசிரியர்: கி.வா. ஜகந்நாதன்; வெளியீடு: சைவசமய பக்தஜன சபை, சென்னை) 1949 உரை
5 UnTexte De La Religion Kaumara LE TIRUKMURUKATTRUPPATAI (Translator: Jean Filliozat Publisher: Institute Fancais Dindologie Pondichery 1973 Text
6 திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி -(பதிப்பாசிரியர்: ஸீ.பி. வெங்கடராம ஐயர்;) உரை
7 திருமுருகாற்றுப்படை பொழிப்புரையும், அரும்பத விளக்கமும் (பதிப்பாசிரியர்: எஸ். துரைசாமி ஐயர்; வெளியீடு: மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை) 1920 உரை