



பாவேந்தர் நூலகம் என்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட குறிப்புதவிச் சேவை அலகாகும். இது மின்னணு வளங்களில் வலுவான திரட்டல்களை உருவாக்கும் செம்மொழி நிறுவனத்தின் அடிப்படைக் கற்றல் வள மையமாகச் செயலாற்றுகிறது.
இந்த நூலகம் 2006ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. இது பழந்தமிழ் மொழியில் சிறப்பான தொகுப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பல்லூடக நூலகமாகும். தற்போது இந்நூலகத்தில் 47,450 நூல்களும் , மின்னூல்கள், மின்னிதழ்கள், குறுவட்டுகள், கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகள், காணொளிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 8000 மின் வளங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய.
செம்மொழித் தமிழ் இலக்கியத்தையும் அதுசார்ந்த களங்களையும் ஆய்வுசெய்வதற்கு வசதியான, எளிதில் அணுகக்கூடிய, பயனுள்ள எண்ணிம நூலக அமைப்புடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த நூலகச் சேவையினை வழங்குதல்.