களவழிநாற்பது

களவழிநாற்பது அறிமுகம்:-

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றிக் கூறும் ஒரே நூல் இதுவாகும். ஏர்க்களம் பற்றியோ போர்க்களம் பற்றியோ பாடப்படுவது களவழி. களவழி நாற்பது என்னும் இந்நூல் போர்க்களம் பற்றியது. இதில் 41 வெண்பாக்கள் உள்ளன.

சோழன் செங்கணானோடு கழுமலம் என்னும் இடத்தில் போரிட்டுத் தோற்றதனால் சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையை மீட்கும் பொருட்டு அவன் நண்பர் பொய்கையார் பாடியது.

இந்நூலின்கண் உள்ள செய்யுள்களில் போர்க்களத்தோற்றம், நாற்படையில் யானைப்படையின் சிறப்பு, கார்த்திகைத் திருவிழா முதலிய செய்திகள் பேசப்பட்டுள்ளன.

களவழிநாற்பது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 களவழி நாற்பது உரைபாடம் (பதிப்பாசிரியர்: கொன்ற மாநகரம் சண்முகசுந்தர முதலியார்; வெளியீடு: மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம்) 1875 - (யுவ மேடரவி) உரை
2 களவழி நாற்பது மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: கா.ர. கோவிந்தராஜ முதலியார்; வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1913 உரை
3 களவழி நாற்பது - ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையுடன்; (வெளியீடு: கழக வெளியீடு, சென்னை) 1924 உரை
4 களவழி நாற்பது ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: பி. ராஜ்ஜா; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு