பழமொழி நானூறு

பழமொழி நானூறு அறிமுகம்:-

முன்றுறை அரையனார் என்பவரால் பாடப்பெற்றது. 400 வெண்பாக்களை உடையது.

ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு திகழ்வது, அப்பழமொழிக்கு ஏற்ற கருத்தை முன்னர்க் கூறுவது, பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல் இதுவே. இதனைப் பின்பற்றிப் பிற்காலத்தில் சதக ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.

அரிய வரலாற்றுச் செய்திகள் சில இந்நூலில் அமைந்திருக்கின்றன. முடியுடை வேந்தரைப் பற்றிய செய்திகளும், கடையெழு வள்ளல்களுள் சிலரைப் பற்றிய செய்திகளும், இதிகாச புராணக் கதைகளும் இந்நூலில் காணப்படுகின்றன.

சொற்சுருக்கமும் பொருள் ஆழமுடைத்தலுமான சிறப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன.

பழமொழி நானூறு தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பழமொழி நானூறு (பதிப்பாசிரியர்: தி. செல்வக்கேசவராய முதலியார்; வெளியீடு: எஸ்.பி.சி.கே பிரஸ், வேப்பேரி, மெட்ராஸ்) 1917 உரை
2 பழமொழி மூலமும் பழைய உரையும் (முதற்பகுதி முதனூறு பாட்டு) (பதிப்பாசிரியர்: நாராயணையங்கார்; வெளியீடு:செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை) 1918 உரை
3 பழமொழி நானூறு (பதிப்பாசிரியர்: தி. செல்வக்கேசவராய முதலியார்; வெளியீடு: டையோசேசன் பிரஸ், வேப்பேரி , மெட்ராஸ்) 1929 உரை
4 பழமொழி நானூறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: எம்.டி. ஜெயபாலன்; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு