திரிகடுகம்

திரிகடுகம் அறிமுகம்:-

நல்லாதன் என்பவரால் பாடப்பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் மூன்று மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுவது. சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றும் திரிகடுகம் எனப்படும். இவை உடலுக்கு நலம் தருவன. இவைபோல இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அமைந்த மும்மூன்று கருத்துக்களும் வாழ்வுக்கு நலம் பயப்பன; ஆதலால், இப்பெயர் பெற்றது.

ஒவ்வொரு செய்யுளின் மூன்றாமடி இறுதியில் தவறாமல் ‘இம்மூன்றும்’, ‘இவைமூன்றும்’, ‘இவர் மூவர்’, ‘இம்மூவர்’ என வரும் தொடர்களுள் ஏதாவதொன்று இடம்பெற்றிருக்கும்.

இந்நூலில் நன்மை பயப்பவை 66 பாடல்களிலும் தீமைபயப்பவை 34 பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.

திரிகடுகம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 திரிகடுகம் - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார் செய்த உரையுடன் (பதிப்பாசிரியர்:சதாசிவப்பிள்ளை; வெளியீடு: வர்த்தமானதரங்கிணீ சாகையச்சுக்கூடம், சென்னபட்டணம்) 1868 (விபவ) உரை
2 திரிகடுகம் - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார் செய்த உரையுடன் (பதிப்பாசிரியர்: விசுவநாதப்பிள்ளை; வெளியீடு: வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம்) 1920 - (இரௌத்திரி) உரை
3 திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: தி.ந. இராமச்சந்திரன்; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு